
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நீங்கா நினைவுடனே நான்காண்டு இதய அஞ்சலி
எமதருமை அம்மாவே எம்மை எல்லாம் தவிக்கவிட்டு நீங்கள்
இறைவனடி சேர்ந்து இன்று நான்காண்டு ஆனபோதும் எங்கள்
ஈரவிழி காயவில்லை எம் துயரோ தீரவில்லை உங்கள்
பாசம் பரிவு பார்வைக்கு பரிசத்திற்கு பாரினில் நாம்
ஏங்குகின்றோம் அனுதினமும் தாளாது தவிக்கின்றோம்
சந்திரனில்லா வானம் தாமரை இல்லாப் பொய்கை
மந்திரி இல்லா வேந்தன் மதகரி இல்லா சேனை போல......
இந்திரகிரியும் இன்றெம்மோடு இந்நிலைக்காளானதே
அன்னையுமாய் தந்தையுமாய் அருகிருந்து அரவணைத்து
அவனியிலே நாம் வாழ அனுதினமும் துணையிருந்தீர்
பசுமையான நினைவுகளுடன் பாசத்தைத் தேடுகின்றோம்
"சந்ததமும் உம் நினைவு சாகாத நம் நினைவே"
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
இன்று அன்னையர் தினம். தன்னலம் பாராது நமக்காகவே வாழ்ந்த எம் தாயே ! அம்மா ! அம்மம்மா !
உங்களுக்கு அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக .
இன்று சித்ராபௌர்ணமி தினம் . வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட நம் முன்னோர்கள் வழி எல்லா அன்னையர்களுக்கும் உரிய சிறப்பான விரத நாளில் . சித்ரகுப்தனார்க்குரிய சிறப்பான விரதநாளில் உங்கள் எல்லோரையும் வணங்குகின்றோம் .
நம்மை ஆசீர்வதிப்பீர்களாக . நமக்கு என்றும் துணையாக இருந்து நல்வழி நடத்துவீர்களாக.
என்றும் உங்கள் நினைவுகளுடன்
அன்பு மகன் ரவிசங்கர்
அருமை மகள் நிவேதிகா
ஆசை மகள் நந்திகா
Write Tribute