5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
35
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வடமராட்சி வதிரி ஞானியார் வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி கந்தையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 14-05-2026
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு
அன்னையே எங்கள்
அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மென்மையான உள்ளம்
கொண்டு உண்மையான அன்பு
தந்து ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே
ஐந்து ஆண்டுகள்
ஆனதம்மா - ஆனால் உங்கள்
நிழல்கள் அழியவில்லை ஆயிரம்
சொந்தங்கள் இருந்தாலும் உன்னைப்போல்
யாரும் இல்லை அன்னையே
உன்னோடு இருந்த அந்த
இனிமையான பொற்காலங்களை
இந்த தனிமையான காலங்களோடு
ஒப்பிடும் போது தான் தெரிகிறது
வாழ்க்கையில் எதை இழந்தேன் என்று
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்