கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா! நீங்கள் தான் எம் உலகம் . நீங்களே எம் வாழ்க்கை . எங்களின் நல்வாழ்க்கைக்காக மெழுகுவர்த்தியாக உருகி எமக்கு ஒளி கொடுத்த தெய்வம் நீங்கள். அன்னையாய், தந்தையாய் , தோழியாய், மந்திரியாய் , நல்லாசிரியையாய், குருவாய் .... எல்லாமே நீங்களே . நம்மை உயரத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்தீர்களே . சொல்லாமல் கொள்ளாமல் சடுதியாக எம்மை விட்டுச் சென்றதேனோ . நீங்கள் இல்லாத உலகை, எம் இல்லத்தை , "இந்திரகிரி" யை நினைத்துப் பார்க்க முடியவில்லையே அம்மா ! இந்த புன் சிரிப்பை, கணீர் என்ற மிடுக்கான குரலை, கரை புரண்ட தமிழ் பேச்சை, சுவையான உங்கள் உணவை , தன்னம்பிக்கையை, துணிவை, பாசத்தை, பரிவை ... இனி எப்போது காண்போம் அம்மா ! .எம்மை கண்ணீர் கடலில் மிதக்க விட்டு வைரவர் திருப்பாதம் சேர்ந்தீர்களே.
அம்மா என் வாழ்வில் கிடைத்த வெற்றிகள், அதிர்ஷ்டங்கள் எல்லாமே உங்களால் தான் .என் ஆணி வேர் நீங்களே. ஆறுதல் சொல்ல இனி உங்களையன்றி எனக்கு யார் உள்ளார் . உங்கள் பிரிவை என்னால் தங்க முடியவில்லையே . என் செய்வேன். என்னுடன் எப்போதும் துணையிருங்கள் தாயே! என்னை வழி நடத்துங்கள் தாயே
Write Tribute
We were shocked to hear the death of Thaiyal Acca, and this being the second loss in Namasivayam uncle’s family in a short span of time. Our heartfelt condolences and deepest sympathy to Thaiyal...