6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தர்மதர்சினி கிருபாகரன்
1971 -
2019
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
35
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:03-12-2025
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மதர்சினி கிருபாகரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
தரணியில் பவனி வந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்று
ஆறு ஆண்டுகள் ஆனதம்மா...
ஆண்டு பல ஆனபோதும் உனையிழந்த
தவிப்பதனில் ஏங்கி வாடுகின்றோம்...
நீ வாழ்ந்து முடிக்கும் முன் எமைவிட்டு
வாழாது மறைந்ததேனோ?
ஆண்டுகள் நூறாயினும் எம் நினைவுகளும்
வலிகளும் ஆறாதம்மா!
உன் மலர்ந்த முகம் இனி எப்போது காண்போம்....
ஆசைகளையும் கனவுகளையும் உன்னுள் அடக்கி
எம்மை பெரிதுவக்க வைத்தாய்
தினம் வந்து வாட்டும் உன் நினைவால்
நிலை குலைந்து நிற்கின்றோம்
கண் மறைந்த போதும் நீ
எம் கண்முன்னே நிற்கின்றாய்!
நாம் மீளாத்துயரோடு உன் நினைவுகளை
சுமந்து நிற்கின்றோம்...
உந்தன் ஆத்மா சாந்தியடையப்
பிராத்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் ஆசை மாமன் மகளே! மாதுளம்பூ நிறத்தவளே!! மச்சாளே,மாம்பழமே ,எங்கள் மாமி பெத்த மருக்கொழுந்தே !! உன் முத்துப் பதித்த முகம்!! முழு நிலவாய் நின்ற முகம் என்று காண்பதுவோ? என ஏங்கி ஏங்கி அழுகின்றோம்...