Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 20 MAY 1938
விண்ணில் 03 MAY 2022
அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு
வயது 83
அமரர் சிவபாக்கியம் மார்க்கண்டு 1938 - 2022 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 46 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் மார்க்கண்டு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா – எங்கள் இதயத்தின் ஒளி

நினைவுகள் பேசும் அமைதியில்
 உன் குரல் இன்னும் கேட்கிறது அம்மா… 
காலம் நான்காண்டாய் நகர்ந்தாலும் 
உன் அன்பு மட்டும் நேற்றாக நிற்கிறது.

எங்கள் முதல் சொல் என்றுமே அம்மா
 எங்கள் முதல் பாதை என்றுமே அம்மா 
எங்கள் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் அம்மா 
உன் நிழல் ஒன்றே நித்தியமாய் அம்மா .

கண்ணீர் வழியும் இந்நேரத்தில் 
உன் சிரிப்பு தான் ஆறுதல், நீ
 இல்லாத வெறுமையிலும் 
நீயே எங்கள் துணை அம்மா.

வானத்தில் ஒரு நட்சத்திரமாகி நீ 
எங்களைக் காத்துக் கொண்டிருக்கிறாய்
 எங்கள் ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும்
 உன் ஆசீர்வாதம் நிறைந்திருக்கிறதம்மா .

கண்ணுக்குள் எந்நாளும் கனிவுறும் தாயே 
உன் கைகளின் வெப்பம் இனி என்றும் இல்லை, 
ஆனால் உன் அன்பின் வெப்பம் நினைவோடு 
எங்கள் இதயத்தில் என்றும் உயிரோடு…

அம்மா, நீ சென்ற இடம் தொலைவாக இருந்தாலும்,
 நீ எம் உள்ளத்தில் என்றும் அருகில்தான் அம்மா
 காற்றெங்கள் மூச்சுப் பையில் கடைசித்துளி 
 இருக்கும்வரை நினைத்திருப்போம் அன்னையே

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos