3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
47
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சஜீவ் ரவிகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-09-2022
என் அருமை மகனே!
என்னைவிட்டு எங்கு சென்றாயோ
என்னை விட்டுப்பிரிய உனக்கு
என்னவென்று
மனம் வந்தது...
என் தங்கமே
என் கடைசிச் சொத்தே
என் கடன் தீர்ப்பாயென காத்திருந்தேன்!
கடைசியில் உன் கடமை பார்ப்பதற்கா
என்னை விட்டு வைத்தாய்
என் நெஞ்சே வெடிக்குதடா!
வேரிழந்த மரமாய் காடிழந்த விலங்காய்
நீரில்லா மீனாய் நெருப்பில் விழுந்த புழுவாய்
நாம் இங்கு துடிக்கிறோம் கண்ணா!
காலமும் கடந்து ஆண்டு மூன்று ஆனது
ஆனாலும்
உன் கால் தடங்கள் மாறவில்லை
மறக்க முடியுமா கண்ணா உன்னை- இந்த
மானிட வாழ்வில் தான்
வலிகொண்டு துடிக்கும் எம் இதயத்தை
தென்றலாய் தேற்ற ஓடிவா
தேவையான அமைதியை
வீதியிலே தேடுகிறோம்
தேடியும் கிடைக்கவில்லை
ஓடியே வந்திடுவாய் மறுபடியும் இங்கே...
தகவல்:
குடும்பத்தினர்