2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
47
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சஜீவ் ரவிகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
மகனே.....!!!
உன் சிரிப்பு சத்தத்தையும்,
உஷ்ண மூச்சுக்காற்றையும்
உன்னதமான அன்பையும், உணர்கிறோம் இன்றும்
ஆண்டுகள் இரண்டு அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறவாது எங்கள் நெஞ்சம்
மலரின் உதிர்வும் மனிதனின் மறைவும்
உலகிற்கு புதிதல்ல - மகனே
உன் பிரிவு எங்களுக்கு அவ்வாறல்ல
உன்னை பிரித்து விட்டு
எங்களை பிரிந்து சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு
நாங்கள் அழுகின்றோம்....
பிரிவின் பின்னரும் - இன்னும் எங்கள் கண்களில்
இருந்துகொண்டு தான் இருகிறாய்
வடிந்தோடும் கண்ணீராக அல்ல - எங்கள்
கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய்...!!!
என்றும் உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
அப்பா, அம்மா, சகோதரி
தகவல்:
குடும்பத்தினர்