Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 10 DEC 1943
உதிர்வு 22 AUG 2022
அமரர் நாகேஸ்வரி யோகநாதன்
வயது 78
அமரர் நாகேஸ்வரி யோகநாதன் 1943 - 2022 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை வடக்கு இலந்தவனம் சித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley யை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி யோகநாதன் அவர்களின் 3ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இன்றோடு 31 நாட்கள்
அவணியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?

நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !

அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் மதியம் 12:00 மணியளவில் பூஜையுடன் ஆத்ம சாந்தி பூஜையும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் இவ் அறிவித்தலை ஏற்று கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 70 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.