2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
70
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வேலணை வடக்கு இலந்தவனம் சித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley யை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி யோகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டாகியும் ஆறவில்லை
எங்கள் சோகம் தாண்டிப் பல
ஆண்டுகள் போனாலும் மாறாது
உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடிநாம் வாழ்வதைக்கண்ட
காலன் தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே!!!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்,
உன் பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் உயிர் உள்ள வரை வாழுமம்மா?
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்
பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
மண்ணைவிட்டுப்பிரிந்த அம்மணிக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! இது இயற்கையின் நியதியெனக்கொண்டு இரத்த உறவுகள் ஆறுதல் பெற இறையருள் கூடுக! - மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்