Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 31 MAR 1967
ஆண்டவன் அடியில் 07 SEP 2021
அமரர் தெய்வேந்திரம் ரவீந்திரன் (ரவி)
வயது 54
அமரர் தெய்வேந்திரம் ரவீந்திரன் 1967 - 2021 இருபாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் ரவீந்திரன் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

என் அன்பிற்குரியவரே, என் ஆருயிரே
என் அன்பின் பொக்கிசமே
அழகாய் வாழ்ந்த எம் குருவிக்கூட்டில்
அகாலமாய் ஒரு குருவி பறந்ததேனோ?
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
ஆருயிரே உங்களுக்கிணை யாருமில்லை இவ்வுலகில்

விண்மீன்களே பிச்சைகேட்கும் உங்கள் சிரிப்பை
விண்ணுக்கே விரைந்து சென்றீர்களோ அள்ளி கொடுப்பதற்கும்
இணை பிரியா அன்றில் பறவைகளாய்
இருந்தோமே என்றும்
இணைத்தவனே எம்மைப் பிரித்துவைத்ததன்
காரணம் ஏனோ?

உடலால் பிரிந்தது உண்மைதான் என்னவோ
உயிராய் உணர்வாய் வாழ்வோம்
ஏழ் ஏழ் ஜென்மத்திலும் என்றுமே
I Miss You my sweet heart

கனிந்த பேச்சினாலும் புன்னகையினாலும்
எல்லோரையும் கவர்ந்தீர்களே அப்பா
கனத்த மனத்துடன் கண்ணீர் மல்கி
கலங்கி நிற்கின்றோம் அப்பா
சிரித்து சிரித்து அரவணைத்தீர்களே
அழுது அழுது ஆதரவற்று நிற்கின்றோம் அப்பா

அழியாத உயிர்கொண்ட
எங்கள் அன்புத் தந்தையே
ஆறாத வடுவாய் வதைபட்டு நிற்கின்றோம்
அழகு முகம் கொண்ட அப்பாவே உங்கள்
அரவணைப்பிற்காக ஏங்குகின்றோம் என்றுமே.

உங்களைப்போல ஒருவர் யாருமில்லை அப்பா
நீங்கள் தான் பிறந்து வரவேண்டும் இவ்வுலகில்
இருந்தாலும் இறந்தாலும் அழியாது அப்பா
உங்கள் பெயரும், புகழும், ஞாபகங்களும்,
தலை முறை எத்தனை கழிந்தாலும்
தவமிருந்து பெற்றிடுவோம் அப்பா உங்களை
We Miss You Dad

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

எங்கள் அன்புத்தந்தையின் ஆத்ம சாந்திக்காக வேண்டி நெதர்லாந்து டென்கெல்டர் ஸ்ரீ வரத ராஜ செல்வ விநாயகர் ஆலயத்தில் 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் ஆத்மசாந்திப்பூசை நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து ஆத்மசாந்திப்பிரார்த்தணையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 69 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.