Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 17 JUN 1938
மறைவு 21 APR 2013
அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம்
யாழ்- மண்டைதீவு பூம்புகார் பூமாவடி கண்ணகையம்மன் ஆலய மரபுவழி பஞ்ச தர்மகர்த்தா
வயது 74
அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் 1938 - 2013 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

நேரான பார்வை!
நேர்மையான வாழ்வு!
தன்னலம் சாராத மனம்!
தனக்கென்று எண்ணாத தெய்வமனம்!
தன்னை மறந்த உழைப்பு!
தன்னையுருக்கி தான்பிறந்த வீட்டை செதுக்கினாய்!
தாய்க்கொரு பாசக் கர்ணணாய் பரிணமித்தாய்! 

இனி  இல்லறமே இனிதெனக்
கண்ணகையாள் கட்டளையிட
வெறுங்கையோடு வேற்றூர் - வந்தும்
வெற்றிப்புன்னகை தந்தாய் !!
ஒரு நேர்மையான வரலாற்றை போதித்த 
எங்கள் தந்தையே - உங்கள் 
திருவடி பணிகின்றோம்- உங்கள் 
நினைவுகளால் வாழ்கின்றோம் !!!

எண்ணமெல்லாம் கண்ணகையாய் 
வாழ்ந்திட்ட - எங்கள் 
தந்தையின் ஆத்மா சாந்திபெற 
மண்டைதீவு பூம்புகார் பூமாவடி 
கண்ணகை அம்பாள் திருவடி வேண்டுகிறோம். 

உங்கள் நினைவுகள் சுமந்து வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்.

திதிக்கிரியை 15-04-2019 திங்கட்கிழமை அன்று மனோகரன் இல்லத்தில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்