Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 FEB 1965
இறப்பு 16 DEC 2008
அமரர் சந்தியாப்பிள்ளை மரியசீலன் (சீலன்)
வயது 43
அமரர் சந்தியாப்பிள்ளை மரியசீலன் 1965 - 2008 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை மரியசீலன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

தன்னை உருக்கி பிறருக்கு
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல்
 உம்மை உருக்கி எம்மை காத்து வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம்
கண்களில் நீர்க்கோலம்

உரிமை சொல்ல எத்தனை ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் அப்பா என்ற உறவுக்கு
யாருமே நிகரில்லை

வாழ்க்கை என்பது இறைவன் அவன்
வகுத்த வரைதானே அடுக்கடுக்காக
ஆண்டுகள் பதினைந்து சென்றன
அருகில் நீங்கள் இல்லாததால் உங்கள்
அன்பு தனை இழந்தோமே நாம்!

அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு
பிறப்பிலும் எமக்கே அப்பாவாய்
பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

என்றும் மறவாத உம் நினைவுகளுடன்
உங்கள் பிரிவால் வாடும் மனைவி பிறேமலதா,
பிள்ளைகள் ஜனார்த்தனன், சுபர்னா, தனுஷா

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Photos

Notices

நினைவஞ்சலி Mon, 16 Dec, 2019
நினைவஞ்சலி Tue, 15 Dec, 2020