நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை மரியசீலன் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பன்னிரண்டு ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ……
இன்னமும் காயவில்லை அப்பா!
கணப் பொழுதும் எண்ணவில்லை
எம் கலங்கரை விளக்கே!
உற்ற பல கருமங்கள்
ஓய்வின்றி செய்வரே
கனவுகள் கனிந்து வருங்காலம்
காவலன் உங்களை கவர்ந்தது ஏனோ!
வேரோடு சாய்ந்தாலும்- உன்
விழுதப்பா நாங்கள்- உம்
திருநாமம் சொல்லியே வாழ்வோம்
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் மனைவி பிறேமலதா,
பிள்ளைகள் ஜனார்த்தனன், சுபர்னா, தனுஷா
தகவல்:
மனைவி, பிள்ளைகள்