கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்ற முதுமொழியை அன்ரியுடன் பகிர்ந்து கொண்ட இறுதிநாட்கள் ஞாபகப்படுத்துகிறது.
மரணப்போராட்டத்தின் இறுதி வாரங்களில் இருந்தபோதும் நம்பிக்கை இழந்த எந்த வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியதில்லை. கொரோனா தொற்று நோயை பற்றி கதைத்தார், குடும்பத்தினரை பற்றி கதைத்தார், குறிப்பாக இளம் தலைமுறையினர் என்ன படிக்கிறார்கள் என திரும்ப திரும்ப விசாரித்தார்.
இனிமேல் நாம் சந்திக்கப்போவதில்லை என தெரிந்திருந்தும் முகத்தில் எந்த வேறுபாட்டையும் காட்டாமல் முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார்.
அன்ரி, அமைதியாக தூங்குஙகள், உங்களுடைய நற்பண்புகள் எம்முடன் வாழத் தொடங்கி விட்டது.
Write Tribute
Accept our condolences