19ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பஞ்சாட்சரம் கிருபாகரன்
உரிமையாளர் சாரங்கன் நகைமாடம்- கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம்
வயது 36
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ”குருபவனம்” கண்டி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத துயரம் கண்டோமே!
ஆண்டு பத்தொன்பது ஆனதுவோ
உங்களின் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ
இன்னமும் காயவில்லை !
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்றும் பெருகுதையா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.