யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 10/01/2026
அம்மா… 9 ஆண்டுகள் ஆனாலும்
அன்பின் நிழல் இன்றும் நம்மை சுற்றியே…
உங்கள் கைப்பிடித்த பாதைகளில்
இன்று நாங்கள் நின்றாலும்,
நடந்த ஒவ்வொரு அடியிலும்
உன் ஆசீர்வாதத் தடங்கள் இன்னும் படிந்துள்ளன.
வீட்டின் மூலைகளில்
உங்கள் சிரிப்பு
மறைந்த பாடல்போல் ஒலிக்கிறது;
உங்கள் நறுமணம்
நம் வாழ்க்கை முழுவதும்
நீங்காத
புனித தரிசனமாய் தங்கியுள்ளது.
இறைவன் முன் ஒப்படைத்தாலும்,
இதயம் முன் ஒப்படைக்க முடியாதவள் நீ;
இந்த உலகில் எல்லாவற்றையும்
அன்பால் கற்றுத்தந்த
எங்கள் நிழல்,
எங்கள் நம்பிக்கை… எங்கள் அம்மா.
இன்றும்
எண்ணத்தினுள் நீயே வாழ்கிறாய்;
கண்ணீரின் வழியே
அன்பின் சிற்பமாக நிற்கிறாய்.
ஒன்பது ஆண்டுகள் ஓடியும்,
நீங்கள் விட்டுச் சென்ற நினைவுகள் மட்டும்
காலத்தால் பழுதாகாத
புனித நூலாய்
எங்கள் இதயத்தில் திறந்தே கிடக்கின்றன...
EG 2 De Mel flats Grandpass Road,
Colombo 14
We miss you Chithra! We miss you a lot! May your soul rest in peace!