6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலன் சுப்பிரமணியம்
(பச்சிலைப்பள்ளி பிரதேச கூட்டுறவு முகாமையாளர், புதுக்குடியிருப்பு இணைய கூட்டுறவு முகாமையாளர், வடமாகாண பேரிணைய முகாமையாளர்)
வயது 69
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வசிப்பிடமாகவும், பரந்தனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலன் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-10-2025
ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!
ஆறாண்டுகள் சென்றிருந்தால் என்ன அப்பா
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடுதய்யா!
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே அப்பா!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!
எத்தனை ஆண்டுகள்
உருண்டோடினாலும் உங்கள்
நினைவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்....
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace