4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஸ்ரீதவராஜா குருசாந்த்
1988 -
2016
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீதவராஜா குருசாந்த் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே
எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது?
மொட்டாகி பூவாகி காயாகி கனியாகும்
வேளையில் காத்திருந்து படைத்தவன்
பழி தீர்த்தானோ ?
நாம் ஆற்றுவதற்கு வார்த்தையில்லை
சாவதற்கு காலனவன் வரவில்லை
இருண்ட இவ்வுலகில் வாழவும் முடியவில்லை
சாகவும் முடியவில்லை செய்வது
எது என்று தெரியாது தவிக்கின்றோம் ஐயா!
என்றென்றும் உன் நினைவால் வாடும் என்றும்
உன் அன்பு உள்ளங்கள்
தகவல்:
குடும்பத்தினர்
RIP