
திதி:25/06/2025
யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், மலேசியா, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் நல்லையா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஆறு ஆனாலும் -உங்கள்
நினைவுகள் மறையாது எம் இதயத்தில் - அம்மா
என்று அழைத்திட யாருண்டு
இவ்வுலகில்-
கண்ணை இமை
போல் காத்த எம் தாயே -
எம்மை விட்டு
ஏன் பிரித்தான் இறைவன்?
தேடுகின்றோம்
உங்களை தென்றலாய் வருவீர்களோ..!
அம்மா
கண்ணுறங்கும் போதும்
கனவினில் உங்கள் திருமுகம்
காண்கையில் -
கண்விழித்து தேடுகின்றோம்
உங்கள்
விம்பம் காணவில்லையே..!
கண்களில் வழித்தோடும் கண்ணீரை
துடைத்திட யாருண்டு அம்மா???
நிலையற்ற வாழ்வில் நிலையான
உங்கள் அன்பை தேடியே
உருகுகின்றோம் அம்மா
உங்கள்
ஆத்மா அமைதிபெற
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..!
வீட்டு முகவரி:
EG 2, De Mel flats,
Grand pass Road,
Colombo-14.