3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவபாக்கியம் நல்லையா
வயது 89
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் நல்லையா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
ஓயவில்லை
உங்களின் நினைவுகள்
அகலவில்லை
அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை,
உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம்
உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின்
இறப்பால்....
என்ன செய்வது எம்
மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு
ஆறுதல் காட்ட
ஒரு
முறையாவது வாங்க
அம்மா
உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்