Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1935
இறப்பு 14 SEP 2018
அமரர் இராசரத்தினம் கனகம்மா
வயது 82
அமரர் இராசரத்தினம் கனகம்மா 1935 - 2018 கரணவாய் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு சோளங்கனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் கனகம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.  

இன்பமாய் நாம் வாழ்வதற்காய்
இன்னல்கள் பலவற்றை சகித்து
இனிதே நாம் உயர வழிகாட்டி
இரவு பகல் எம்மோடு கதைபேசி
மண்ணுலகில் மாந்தர் மனதில்
அழியாப் புகழோடு அன்பாய் வாழ்ந்து
விண்ணுலகு சென்று விடிவெள்ளியாய்
விசும்பை அழகாக்கும் எம் அன்னை

காண்பது கனவுதானோ அள்ளியணைத்த தாயே
அமுதமொழி பகிர்ந்த எம் அன்னையே
பண்புடன் வளர்த்த பாசமிகு தாயே
பரிதவிக்க விட்டுச் சென்றதுதான் முறையோ
சுமையின் வலி தெரியா இதயம் கொண்ட தாயே
நம் குடும்பம் செழிக்க வளர் பிறையாய் உம்
வாழ்வைத் தியாகித்த செல்வச் செம்மலே
மறப்பதற்குக் கூட மனம் இடங்கொடுக்கவில்லையம்மா

கரணவாய் மண்ணும் உம்மை
காலமெல்லாம் சுமக்கும் அம்மா
கடவுளாய் நினைத்திருப்போம் உம்மை

காலமெல்லாம் வணங்கிடுவோம் தெய்வமே
கடமைக்குரிய பிள்ளையம்மா நான்
கடமை செய்ய ஒருபோதுமே மறவேனம்மா
கடமைதனை இராமேஸ்வரத்தில் நிறைவேற்றி காலமெலாம்
எம்மோடிருக்க கடவுளிடம் கையேந்தி நிற்கிறேனம்மா

தன் வாழ்நாள் முழுவதும் பாசமுடன்
எம் மனதில் நிலைபெற்று ஒளியாகி
காலம் ஒன்று கடப்பதனைக்
கவலையும் கண்ணீருமாய் காணிக்கையாக்கி
ஆண்டொன்று அகன்றிட்ட நாள்
இன்றென்று எண்ணி ஆண்டவனை
வேண்டி நிற்கின்றேனம்மா உம்
ஆத்மா சாந்திக்காய் என்றென்றும்..
உங்கள் பிரிவால் துயரும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

அன்னாரின் முதலாம் ஆண்டுக்கிரியை 03-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இராமேஸ்வரத்தில் நடைபெறும்.

தகவல்: குமார்(மகன் )

Photos