Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 APR 1938
இறப்பு 03 NOV 2019
அமரர் இராசையா குமாரசாமி (குமாரு கல்வயல்)
வயது 81
அமரர் இராசையா குமாரசாமி 1938 - 2019 சாவகச்சேரி கல்வயல், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கல்வயல் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குமாரசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி திகதி: 31-10-2022

மூன்று ஆண்டுகள் முடிந்தே விட்டாலும்
 மீண்டு வரும் நினைவுகளோடும்- உங்கள்
 கண்டிப்பும் கனிவுமான வளர்ப்பினை
எண்ணியே நாமும் வாழ்கின்றோம் இங்கே

அன்பான துணைவனாய் பாசமிகு தந்தையாய்
 பண்பான மாமனாய் நேசமான பேரனாய்
உற்றதொரு உறவினராய் உண்மையான தோழனாய்
 கல்வயலில் கழித்த நாட்களை
களிப்புடனே எண்ணி கலங்கி தவிக்கின்றோம்

தேசம் விட்டு தேசம் மாறியும்
பாசமான நண்பர்களை தேடினீர்கள்
 பாரமான செய்தியை தந்துவிட்டு
தூரதேசம் செல்ல துணிந்தது தான் ஏனோ?
பாறணை நாளதனில் சூரணை கொன்றவனின்
 காலடி அதனை பற்றி கனதூரம் சென்றீர்கள்
 கந்தனின் திருவுருவத்தில் காண்கின்றோம் உம் முகமதனை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 ஆண்டவனை பிரார்த்திப்போம்...


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகன் - மகன்
ரவி - மகன்