


யாழ் வேலணை மண்ணின் வண்ண மகள்.. பாசத்தின் இருப்பிடம்.. பண்பின் தீரமகள்.. உறவுகளின் ஆனந்தம்.. அறுவருள் ஒருவராய் பிறந்தே மணமது கண்டு.. இடமது பெயர்ந்தே.. நன்மக்கள் பெற்றவளாய்.. கணவனின் கரும தேவையெது என கணநேரம் தூங்கா செயல்மகள் குடும்பத்தின் குத்துவிளக்கு லிங்கேஸ்வரி பார்த்தீபன்.. காலன் கவர்ந்திட ஆண்டவன் காலடி கண்டது தகுமோ இறையே... மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மனக்கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு அன்னை செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
இந்த கடினமான நேரத்தில் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.