யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel City, Breitenbach ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் லிங்கேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நேற்றுவரை எம்மோடு இருந்தாய்
காற்றோடு கலந்து கனவாகிப்போய்
மாதம் ஒன்று வந்தும் ஆறமுடியவில்லை!
அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகியவளே
உந்தன் பிரிவால் இன்றும்
நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!
உன்னைப் பிரிந்த நாள்
முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய்
எங்களை கொல்கிறது
உன்னழகு
வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி
நில விழந்த
வானமென
இருண்டு கிடக்குதம்மா!
விழிகள் சொரிகிறது
நிரப்ப முடியா
வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை நிலைதடுமாற
வைத்து
எங்கு சென்றாய்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி ஆத்ம சாந்தி பிரார்த்தனை 05-07-2025 சனிக்கிழமை அன்று Rebgasse 16, 4058 Basel எனும் முகவரியில் நடைபெறும், அதனை தொடர்ந்து நடைபெற உள்ள மதிய போசன நிகழ்வில் அனைவரும் குடும்ப சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மாசாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி🙏🙏🙏 திரு மாமா குடும்பம்