Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 03 FEB 1947
உதிர்வு 17 JUL 2017
அமரர் நடராசா சண்முகநாதன் (ஓமான்குணம்)
வயது 70
அமரர் நடராசா சண்முகநாதன் 1947 - 2017 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி உருத்திரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சண்முகநாதன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-08-2023

பெற்றெடுத்து ஆளாக்கி பெருவாழ்வு தந்த தந்தையே..!
சான்றோரும் சார்ந்தோரும் போற்ற வாழ்ந்த விந்தையே...!
பெயருடன் புகழுடனும் வாழ வைத்த சிந்தையே...!

வானுலகம் சென்று வருடங்களானாலும்
பூவுலகில் உமை பிரிந்து
கண்ணீரில் குளிக்கின்றோம்..... தந்தையே...!

நீயிருந்த காலம் எல்லாம் நெஞ்சம் எல்லாம்
இனித்ததுவே
நிலவொலியில் கதை சொன்ன ஞாபகங்கள்
காற்றில் வந்து ஒலித்ததுவே...!
பேருலக வாழ்வின் இன்பத்தை எல்லாம் அளித்த தந்தாய்
வேறுலகம் சென்றதனால்— விடியவில்லை நாட்கள் பூவாய்....!

வேர் ஊன்றி விழுதெறிந்து நாம் காலூன்றி நடக்க
பாதைகளை படைத்த படைத்தவனே...!
பார் போற்ற பிள்ளைகளை உருவாக்கி -
பகலவனாய் ஒளிர்ந்து.... காத்தாய் ஆதவனே....!

வாழுகின்ற காலம் எல்லாம் வசந்தத்தை விதைத்தாய் நீயே
ஆளுகின்ற சிவனோடு போய் அமர்ந்தாய் .... அழகிய தீவே...!

காலம் எல்லாம் கைவிளக்காய் எமக்கு முன் வெளிச்சமானாய்...!
பொற்காலத்தையே உருவாக்கி - அனைவருக்கும்... ஆண்
தாயுமானாய்.....!
முதுமை வந்தும் முடங்காது எல்லோருக்கும்
காதலானாய்...!
முற்றுப் பெற்ற வாழ்க்கைக்கு நன்றி சொல்லி
இயற்கையானாய்.....!

எமைப் படைத்த தெய்வமே....!
எமை ஆட் கொண்ட மூலமே...!
உமை இழந்த நொடிகள் தொட்டு
இமை உறங்கவில்லை ...!
உமை ஈசன் அருள் பெற்று மீண்டும்...
உதிக்க வேண்டும் - மனம் இரங்குது ... தெய்வமே...!

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்