Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 03 FEB 1947
உதிர்வு 17 JUL 2017
அமரர் நடராசா சண்முகநாதன் (ஓமான்குணம்)
வயது 70
அமரர் நடராசா சண்முகநாதன் 1947 - 2017 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி உருத்திரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சண்முகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

விழிகள் உறங்கினாலும்
நினைவுகள் தூங்காது
ஒலிகள் அடங்கினாலும்...
தந்தையின் வாய் மொழிகள் உறங்காது

விந்தை நிகழ்த்தி சிந்தைய மர்ந்த
எங்கள் பெருமானே
முந்தை பிறப்பாய் அதிசயம்
நிகழ்த்திய எங்கள் அருளானே
ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் ...

ஞாபகங்கள் பூக்கிறதே
ஆலயமணி ஓசையாய் அனுதினமும்
காலை மாலை கேட்கிறதே

எத்தனை எத்தனை இன்பம்
கண்டோம் உங்கள் நிழலினிலே
அத்தனை அத்தனை இன்பம் கண்டீர்கள்
பிள்ளைகள் மகிழ்வினிலே
சித்தனை சிவனை போல் கண்டோம்
தங்கள் உருவினிலே இத்தனை பிள்ளைகளும்
உருவானோம் உங்கள் கருவினிலே

துணையவள் அழுகைகள் தொழுகையாக
மகள் மக்கள் மருமக்கள்
புதிய எழுகையாக பேரப்பிள்ளைகள்
முகங்கள் தங்கள் வருகையாக
வேர் விட்டு விழுதெறிந்து
பூக்கிறது குணம் எனும்
பெரும் பொய்கையாக

பூவுலகை விட்டு வானுலகம் சென்றாலும்
பூக்களைப் போல் மலர்கிறீர்கள்
ஞாபகங்களின் ஊர்வலத்தில்
நாயகனாய் வாழ்கிறீர்கள்
வேறு உலகம் சென்றாலும்
வேர்மூலமாய் ஆள்கிறீர்கள்
இது ஒன்றே நாம் செய்த பாக்கியம்
இனி வரும் காலம் எல்லாம் ஆளட்டும்- தங்கள் ராச்சியம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி  

தகவல்: மனைவி, பிள்ளைகள்