Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 NOV 1944
இறப்பு 14 JUN 2019
அமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்
வயது 74
அமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம் 1944 - 2019 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிஷால் சவிரி திருச்செல்வம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புகாட்டி எம்மை ஆதரித்து
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டு இன்று
ஆண்டு ஒன்று ஆனபோதும்
அனுதினமும் நீங்கள் அசைந்து திரிந்து
இடமெங்கும் அப்ப உங்கள்
திருமுகம் தோன்றுதிங்கே!

நாம் இந்த மண்ணில் வாழும்வரை
நம் இதயத் தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும் உங்கள்
நினைவுகளை மறக்கத்தான் முடியவில்லை

பன்னிரண்டு  மாதங்கள் பட்டென்று போனதென்ன
பாசமாயிருந்து எம்மையெல்லாம்
பரிதவிக்க விட்டு நீங்கள் மட்டும்
வானகம் சென்றதென்ன- அப்பா

எங்களோடு தான் இருக்கின்றீர்கள்- ஆனால்
உருவத்தைக் காணவில்லை
மங்காத ஒளிவிளக்காய் ஒளிர்கின்றீர்கள்
எம் உள்ளத்தில் என்றும் அப்பாவாய்!

வாழ்ந்தால் உங்கள்போல்
மாமனிதாராய் வாழவேண்டும்
மங்காமல் உங்கள் பெயரை
நினைவில் வைத்திருப்போம்- எத்தனை
ஜென்மம் ஆனாலும்- உங்கள்
ஆத்மா இளைப்பாற கர்த்தர்
அருள் புரிவாராக

உங்கள் நினைவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உடன்பிறவாச் சகோதரன் இருதயம் குடும்பம். 
 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்