4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மகாலிங்கம் செல்வகுமார்
(சுவிஸ் குமார்)
வயது 54
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-02-2022
நாட்கள் நகர்கின்றதா இல்லை பறக்கின்றதா!
எங்களை நிர்க்கதியாய் தவிக்கவிட்டு
எங்களின் உயிருக்குயிரானவனே
எங்களைப் பிரிந்து நான்கு ஆண்டுகள் மறைந்ததையா
காலம் நகரலாம் கண்ணீரும் கவலையும்- என்
இதயத்திற்கு மட்டுமே சொந்தமாய் போனதையா
என்னுயிரே! ஏன் இந்த சுமை தந்தீர்?
என் உயிர் உள்ளவரை சோகத்தை....
ஏன் சுமக்கவைத்து விடைபெற்றீர்!
துன்பம் என்ற சொல்லை
நீங்கள் பிரியும் வரை அறியவில்லை
இன்று வரை.........
எங்கள் இதயம் உங்கள் பிரிவை
ஏற்கவில்லை.........
நடந்தவை கனவாகப் போகாதோ..?
மீண்டும் ஒருதரம் வாய்விட்டு அழைத்து
எங்களை அரவணைக்க மாட்டீர்களா?
உங்கள் பிரிவால் ஆறாத் துயரில்
வாடிநிற்கும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்