Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 AUG 1934
இறப்பு 21 AUG 2014
அமரர் மகாலட்சுமி இராஜலிங்கம் (லிங்கம்மா)
வயது 79
அமரர் மகாலட்சுமி இராஜலிங்கம் 1934 - 2014 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலட்சுமி இராஜலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

 ‘‘பிறப்பும்- இறப்பும்
இணைந்த நாள் இன்று”

பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல
பிறந்த இந்நாளில் நீயோ
இறந்த நாள் திதியாம் இன்று
இரங்கலா சொல்வோம்! அம்மா
சிறப்புடன் வாழ்ந்து அந்தச்
சிறப்பெல்லாம் எமக்கும் தந்து
இறந்து நீ போன பின்பும்
இறவாதுன் நினைவு அம்மா

மறதியால் எதையும் மறப்போம்
மறந்தும் நாம் உன்னை மறவோம்
பிறவி நீ எடுத்தாற் கூடப்
பிள்ளையாய் பிறக்கக் கேட்போம்
உறவிலும் உன்பேர் காத்து
உள்ளநாள் வரையில் வாழ்வோம்
அறம்பொருள் இன்பம் வீடு
அம்மாவின் நினைவில் காப்போம்

அம்மாவுன் மடியில் வாழ்ந்த
அந்நாட்கள் போல வருமா
இம்மா உலகம் ஆளும்
இன்பமும் இன்பம் தருமா
சும்மா வா சொன்னார் தாய்மடி
சொர்க்கம் என்று? ஐயோ
அம்மா நீ போன போதே
ஆசையும் போச்சு போச்சே!

ஊராரின் அன்பில் திழைத்தாய்
  ‘‘லிங்கம்மா
” வாகி நிலைத்தாய்
நீராவியடியினில் வாழ்ந்தாய்
நீ வெளிநாட்டிலும் மகிழ்ந்தாய்
வாராத சாவு உன்னையும்
வாரியே கொண்டு போச்சே
தீராத துயரில் உணரும்
சொந்தமும் கலங்க  லாச்சே....

அமரர் மகாலட்சுமி இராஜலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவும், பிறந்த நாள் நிகழ்வும் அன்னையின் இல்லத்தில் 27-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்