Clicky

31ம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு 10 MAY 1942
இறப்பு 26 OCT 2020
அமரர் கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா
ஒய்வு பெற்ற வர்த்தக முகாமையாளர் உடுப்பிட்டி ப.நோ.கூ.சங்கம்
வயது 78
அமரர் கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா 1942 - 2020 வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலி

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திகின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 25-11-2020 புதன்கிழமை அன்று அதிகாலை 04:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று அஸ்தி கீரிமலை புனித தீர்த்தக்கரையில் கரைக்கப்படும். அதனைத் தொடர்ந்து மதியம் 12:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.