2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா சின்னத்துரை
ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்- தமிழ் தென்மராட்சி
வயது 68
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கொடிகாமம் மந்துவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு கோயிலாமனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சின்னத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தீர்கள்
அல்லும் பகலும் அயராமல் எமக்காய் உழைத்தீர்கள்
உலகுக்கு உத்தமனாய் என்றும் வாழ்ந்தீர்கள்
உயிரிலும் உணர்விலும் ஒன்றாய்
கலந்திருந்தீர்கள்
உயிர் உள்ளவரை உங்களோடு இருப்பேன் என்றீர்கள்
எதற்கும் கலங்கியதில்லை நீங்கள்
எம்மோடு இருந்தவரை
உள்ளத்தில் பல கனவுகள்
ஒன்றாக நாம் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவீர்கள் என்று
கனவிலும் நினைக்கவில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
He was a classmate of mine at Veerasingham Mahavithyalayam. He was a very kind and friendly person. May his soul rest in peace. - Thiraviyanathan