யாழ். நெடுந்தீவு நடுக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி இரவீந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
காயங்கள்  ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
                     
                     
         
                         
                         
                         
                         
                             
                     
                     
            
என்றும் நீங்காத நினைவுகளுடன் பெரியம்மா.... அருகில் இருந்து உம்மவர்க்கு ஆறுதல் கூறமுடியாது தவிக்கின்றோம். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...