1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நெடுந்தீவு நடுக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர் கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலாதேவி இரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-07-2022
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
மாதங்கள் பல கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....
மண்ணிலே வீழ்ந்த மழை
மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள்
மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ?
எம்கண்ணிலே வழியும் நீரை
உங்கள்
கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
என்றும் நீங்காத நினைவுகளுடன் பெரியம்மா.... அருகில் இருந்து உம்மவர்க்கு ஆறுதல் கூறமுடியாது தவிக்கின்றோம். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...