5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னார் உயிர்த்தராசன் குளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் சந்தாம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் இன்னும்
எம் நெஞ்சை விட்டு அகலவில்லை
எங்கள் உறவாக எங்கள் நினைவாக
ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
காலமெல்லாம் வரைந்து வைத்த ஓவியமாய்
எம்முடனே வாழ்ந்திடுவாய்
மீண்டு வருவாய் என வழி பார்த்திருந்தோம்
விண்மீன்களாய் தான் தெரிகின்றாய்
அன்புள்ளங்கொண்ட ஆருயிர் அப்பாவே!
அகரத்தில் எங்களுக்கு பெயர்சூட்டிக்
கூப்பிட்டீங்கள் இப்போ நீங்கள்
இல்லாமல் நாங்கள் காற்றில்
அறுபட்ட பட்டமாய் தவிக்கின்றோம்!!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா!
தகவல்:
குடும்பத்தினர்