

திதி:17-06-2025
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் அமரசிங்கம் சிவகுமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்
உயிரினும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்
உயிருள்ள வரை உங்களோடு இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்த
வரை உள்ளத்தில் பல கனவுகள் ஒன்றாக நாம்
கண்டோம் கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை
அப்பா நீங்கள் இல்லாத் துயரம் எம் இதயத்தை வாட்டுகிறது.
பாசமாய் எங்களை வளர்த்த அப்பாவே!
பார்க்கும் இடமெல்லாம் எங்கள் பார்வைக்குள்
தெரிகின்றீர்கள் ஒவ்வொரு நொடியும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகில்- நீங்கள்
வாழ்வதைப்
போன்று உணருகின்றோம் அப்பா!!!
எக்கணமும் உங்கள் நினைவாக வாழும்
அன்பு மனைவி, பிள்ளைகள்...