

-
01 SEP 1926 - 19 JAN 2021 (94 வயது)
-
பிறந்த இடம் : நவாலி வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வல்வெட்டி, Sri Lanka கனடா, Canada பிரித்தானியா, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
எனது ஆருயிர் நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான ராஜகோபால் அவர்களின் அருமை அம்மாவின் மறைவினால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பை எங்களாலும் உணர முடிகிறது. அமரர் திருமதி விசாலாட்சி குமாரசாமி அவர்களை அவரது பிள்ளைகளைப் போன்று நானும் எனது துணைவியாரும் அம்மா என்றே அழைப்போம். அன்னாருடன் எனக்கு இருந்த பாசம் நான்கு தசாப்தங்களையும் கடந்து புலம்பெயர்ந்த பின்னரும் நீடித்து வந்தது. இந்த உறவை உண்மையிலேயே ஒருபோதும் மறக்க முடியாது. 1974-ம் ஆண்டில் யாழ் ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றிய வேளையில் முதல் தடவையாக வல்வெட்டியில் இருந்த அவரது இல்லத்துக்குச் சென்ற நாள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜகோபாலின் லண்டன் இல்லத்துக்குச் சென்ற நாள் வரை அவருடனும் அன்னாரது பிள்ளைகள் மற்றும் மருமக்களுடனும் நெருங்கிப் பழகி அவர்களது அன்பைப் பெற்றிருக்கிறேன். வல்வெட்டியிலும் சரி லண்டனிலும் சரி ராஜகோபாலின் இல்லத்துக்கு செல்லும் வேளைகளில் எல்லாம் என்னுடனும் எனது துணைவியாருடனும் அன்னார் அன்புடன் உரையாடிய நாட்களை என்றுமே எங்களால் மறக்க முடியாது. அன்பின் உறைவிடமாகவே அவரை நான் பார்த்திருக்கிறேன். அன்னார் எமக்கு தூரத்து உறவு முறையும் கூட. அவர்களது வல்வெட்டி இல்லத்துக்குச் சென்ற பின்னர்தான் அந்த உறவு முறையையும் அறிந்து கொண்டேன். உலக நாடுகளை எல்லாம் உலுக்கிக் கொண்டிருக்கும் கோவிட் நோய் காரணமாக அன்னாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையில் அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதை விட வேறு எம்மால் என்னதான் செய்ய முடியும். திரு.திருமதி கந்தசாமி பாரிஸ் - பிரான்ஸ்
Summary
-
நவாலி வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
பெரியம்மா இவ்வுலகைவிட்டுச் சென்று ஓராண்டு கடந்தாலும், அவரது நினைவு எங்கள் உள்ளங்களில் பசுமரத்தாணியாகப் பதிந்துள்ளது. இவர் புறங்கூறா நல்லுள்ளம் கொண்டவர் என்பதை இந்த நல்லுலகம் நன்கறியும்....