7ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் வேலணையூர் பொன்னண்ணா
1939 -
2018
வேலணை 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Billund ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-08-2025
வாழ்க்கை என்பது இறைவன் அவன்
வகுத்த வரைதானே
அடுக்கடுக்காக ஆண்டுகள் 7 சென்றன
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்பு தனை இழந்தோமே நாம்!
அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு பிறப்பிலும்
எமக்கே அப்பாவாய் பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும் பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்