5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வீரசிங்கம் மனோகரன்
(கருணா)
வயது 59
அமரர் வீரசிங்கம் மனோகரன்
1961 -
2021
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
27
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Gerlafingen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் மனோகரன்(கருணா) அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஐந்து வருடம்
எண்ணியபோது ஈரமானது கண்கள்!
கனமானது இதயம்!
மனம் ஏங்கி தவிக்கின்றது உன்னைக் காண!
உன் குரல் கேட்க! காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீர் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம் கனவெல்லாம்
நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை
பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
உன் பிரிவால் வாடும் குடும்பத்தினர்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்