யாழ். மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறை திருப்பூர் ஒன்றியம் சங்கரியார் வளவு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்டிருந்த முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சங்கடா சதுர்த்தி திதி: 19-04-2022 மற்றும் 20-04-2022.
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம்
நீங்கள் தானே!
நீங்கள் என்னைவிட்டு
நீண்டதூரம்
சென்றாலும்
உன் ஆசைமுகம்
என் நெஞ்சில்
நிலைத்திருக்கும் உங்களோடு
வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று
எண்ணித் துடிக்கிறேன்.
ஆறாத உமது
நினைவுகளால் மாறாத
எமது கவலை
என்றும் வாராதா உமது
இனிய முகம்
காணாதா எமது கண்கள்
உங்கள்
அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!