வவுனியா ஓமந்தை பெரியவிளாத்திக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கதிரவேலர் பூவரசங்குளத்தை வசிப்பிடமாகவும், குருமன்காட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சிவசுப்பிரமணியம் அவர்களின் நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியைகள் 03-11-2023 வெள்ளிக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 05-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று குருமன்காடு காளி கோவில் மண்டபத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.49/92, கோவில் வீதி,
குருமன்காடு, வவுனியா.
We will all miss you our beloved Iyaa