திதி:25/09/2024
வவுனியா ஓமந்தை பெரியவிளாத்திக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கதிரவேலர் பூவரசங்குளத்தை வசிப்பிடமாகவும், குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயா! அன்புக்கு உருவம் நீங்கள் ஐயா!
எங்களை விட்டு நீங்கள்
எங்கு தான் சென்றீர்களோ?
ஆண்டு ஒன்று ஆகிவிட்டது ஐயா
உங்கள் அன்பு முகம் பாராமல்
நாங்கள் கலங்கித் தவிக்கின்றோம்..!
ஆலவிருட்சம் போல் கிளைகளைப் பரப்பி
எங்களை எல்லாம் தாங்கி நின்றவரே..!
இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை
உங்கள் நினைவுகளும் எங்கள் உள்ளத்தில்
வற்றாத ஊற்றாகப் பொங்கிப் பெருகும்..!
உங்கள் வாழ்வின் சிறப்புகளை
எங்கள் மனதில் நிலை நிறுத்தி
உலகம் உங்களைப் போற்றும்படியாக
நாங்கள் மண்ணில் வாழ்வோம்..!
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
உளமுருகி இறைவனிடம் வேண்டுகிறோம்..!
We will all miss you our beloved Iyaa