Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 AUG 1935
இறப்பு 07 SEP 2019
அமரர் திலகவதி விஸ்வநாதன் 1935 - 2019 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.


யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திலகவதி விஸ்வநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இல்லா வீடானேன் என்தாயே!

இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லாப் படகாக
திகைக்கின்றேன் உந்தன் மூத்த மகன் யோகன்

துயரம் துடைத்த தாயவளே
இன்பம் இழைத்த இனியவளே
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எனக்கு உன்னைப்போல் யார் உள்ளார்!

ஓய்ந்துவிட்ட ஒளிமையே
கரைந்துவிட்ட காவியமே
வளர முடியாத வளர்பிறையே
வருவாயா? மறுபடியும் என்தாயே....

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.   

தகவல்: யோகன்(மூத்த மகன்)

கண்ணீர் அஞ்சலிகள்