Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 08 AUG 1935
இறப்பு 07 SEP 2019
அமரர் திலகவதி விஸ்வநாதன் 1935 - 2019 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி விஸ்வநாதன் அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற விஸ்வநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ராசாத்தி, யோகநாதன்(லண்டன்), லலிதா(கொழும்பு), செல்வநாதன்(லண்டன்), வாசுகி(கொழும்பு), ரகுநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயகுமாரி, பாலசூரியன், தயாநிதி, கங்கைவேணியன், நிசாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், கோமேதகவள்ளி மற்றும் தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகனேஸ்வரி,  இராசலட்சுமி, மோகனதாஸ், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான சரசு,வேலாயுதம், பாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவசரணம், கனகரெட்ணம் மற்றும் சரவணபவாநந்தன், ரதி ஆகியோரின் அன்பு  உடன்பிறவாச் சகோதரியும்,

பிரியந், சுகந், மயூரன், மதுரன், ராகவி, ஆருஜன், ஆருதி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

பானுரேகா- சபேசன், பானுப்பிரியா- சுரேன், சுதர்ஷன், திவ்யா- நிஷாந், சுகந்தன், பிரஷாந்தி, ரமேஷ், சுகந்தி, கோகுலா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

வருண், சங்கவி, பிரவிந், வாகினி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இல 10, இந்து மகளிர் ஓழுங்கை, கந்தர்மட இல்லம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணிக்கு வேலணை மேற்கு அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்