14ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
24
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
முல்லைத்தீவு விசுவமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொரூபன் சுருதியன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
மகனே!
உன் சிரிப்பு சத்தத்தையும்,
உஷ்ண மூச்சுக்காற்றையும்
உன்னதமான அன்பையும்,
உணர்கின்றோம் இன்றும்!
ஆண்டுகள் பதிநான்கு அல்ல
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும்
மறவாது எங்கள் நெஞ்சம்
மலரின் உதிர்வும் மனிதனின் மறைவும்
உலகிற்கு புதிதல்ல- மகனே
உன் பிரிவு எங்களுக்கு அவ்வாறல்ல
பிரிவின் பின்னரும்- இன்னும்
எங்கள் கண்களில்
இருந்துகொண்டு தான் இருக்கிறாய்
வடிந்தோடும் கண்ணீராக அல்ல- எங்கள்
கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய்...!!!
உன் ஆத்மா சாந்தியடைய
எல்லாம்
வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்