9ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பூரணம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-11-2025
அன்பால் எமைத் தாங்கிய
அருமை அம்மாவே இன்னும்
ஆறவில்லை
நெஞ்சில் பட்ட
வலி
எங்கள் தெய்வமே
காலன் இட்ட கட்டளையில்
காற்றில் கலந்து போனீர்களே!
ஆண்டு ஒன்பது நொந்து
நொந்துதான் கரைய
எங்கள்
கண்ணோர விழி நீரும்
இன்னும்
காயாமல் போகின்றதே
நீ
இல்லாமல் அரண்மனையாய்
இருந்தாலும்
அநாதையாய்
தவிக்கின்றோம் அம்மா…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும்
தாயே உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்