6ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பூரணம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:06/11/2022.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத சுடராய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஆறு அகன்றே
நின்றாலும்
அழியாத
நினைவலைகள் எம்
அகத்தில்
நின்று ஆழத்திலே வாட்டி
வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம்
உயிரினுள் உயிராகி
உறவிலே
கலந்து ஏற்றமுடன் நாம்
வாழ ஏணியாக
இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்