வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சேது மகேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்று கடந்ததுவே உங்கள் பளிங்கு முகம் பார்க்காமல் உங்கள் பாசக் குரல் கேட்காமல் உங்கள் நினைவோடு நாம் வாழ்ந்து மூன்று ஆண்டுகள் ஆனதே அம்மா! எத்தனை காலம் போனாலும் எம் ஜீவன் உள்ள மட்டும் உங்கள் நினைவு மாறாது உங்கள் உறவுகள் மறக்காது கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது... விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே! உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து உருவம் கொடுத்த உயிரே! இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து எமக்காய் உன் உறக்கம் துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா… நீங்கள் இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும் அநாதையாய் தவிக்கின்றோம்… ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா? உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!