1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை செல்வராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும்
ஆறாது அப்பா நம் துயரம் - நீங்கள்
இல்லையென்பது இன்னமும் தான்
ஏற்க மறுக்கிறது நம் இதயம் - ஏனெனில்
நீங்கள் எம் உள்ளங்களில் வாழ்கின்றீர்கள்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்று எங்கள் விழிகளிலே
வழிகின்றதே கண்ணீர்துளிகள்
காத்திருந்து பறித்ததென்ன
கயவனே உன் நீதியென்ன
கண்களிலே நீருமில்லை
காத்திருக்க பொறுமையுமில்லை
உங்கள் நினைவு மட்டும்
மாறவில்லை அப்பா!
பொட்டிழந்து பூவிழந்து நிற்கின்றேன்
நான் செய்த பாவம் என்ன
நித்திரையின்றி தவிக்கின்றேன்
நிம்மதியில்லாமல் வாழ்கின்றேன்
ஆண்டுகள் போனாலும் ஆறாது என மனம்
உன்னடி சேர காத்திருக்கின்றேன்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்