Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 29 AUG 1951
உதிர்வு 07 MAY 2022
அமரர் செல்லத்துரை புஸ்பநாதன்
வயது 70
அமரர் செல்லத்துரை புஸ்பநாதன் 1951 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அரியாலை மாம்பழம் சந்தியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை புஸ்பநாதன் அவர்களின் வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 04-06-2022 சனிக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியை 06-06-2022 திங்கட்கிழமை அன்று 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
வீரபத்திரர் லேன்,
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மல்லிகா - மனைவி
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.