18ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் எஸ். ஜே செல்லத்துரை
முன்னாள் கிராம சேவை அலுவலர், அதி விசேட தரம் பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்
வயது 56
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எஸ். ஜே செல்லத்துரை அவர்களின் 18ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல் உம்மை உருக்கி
எம்மை காத்து வந்த தெய்வமே அப்பா...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த காலமெல்லாம்
பொற்காலம் - நீவீர் பிரிந்த காலமெல்லாம்
எம் கண்களில் நீர்க்கோலம் அப்பா...
உரிமை சொல்ல எத்தனை ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் அப்பா என்ற
உறவுக்கு யாருமே நிகரில்லை
ஆண்டு பதினெட்டு போனாலும் அழியாது நம் சோகம்
மீளாது எம் துயரம் மறையாது
உங்கள் நினைவு ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள் அப்பா!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்